உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் படுகாயம் :  

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் படுகாயம் :  

பூந்தமல்லி, காஞ்சிபுரம் அடுத்த ஓச்சேரியைச் சேர்ந்தவர் கணபதி, 28 ; தனியார் பேருந்து நடத்துனர். இவர், நேற்று காலை பேருந்தில் நின்றபடி, கோயம்பேட்டில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை செல்லும் போது, கணபதி, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.பயணியர் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை