| ADDED : நவ 20, 2025 03:13 AM
மாதவரம்:: மாதவரம்: டீ கடைக்கு சென்றார்.: அப்போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர், அப்பெண்ணின் தோளில் கை வைத்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வாலிபர் ஆபாசமாக சைகை செய்து, அவதுாறாக பேசி கையால் தாக்கிவிட்டு தப்பினார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த மோசஸ் என்கிற அப்பு, 25, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.