உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.பி.சி., பட்டியலில் சேர்க்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஓட்டு இல்லை 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் திடீர் போர்க்கொடி

எம்.பி.சி., பட்டியலில் சேர்க்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஓட்டு இல்லை 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் திடீர் போர்க்கொடி

பொள்ளாச்சி:''பி.சி.,யில் இருந்து எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஓட்டுப் போட மாட்டோம்'' என, தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்க தலைவர் தெரிவித்தார்.பொள்ளாச்சியில், தமிழ்நாடு, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், சமுதாய மக்கள், மற்ற சமுதாய மக்களுக்கு கல்வி உதவி உள்ளிட்டவை வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் நடராஜன் அளித்த பேட்டி: கடந்த, 50 ஆண்டு காலமாக 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை, பி.சி., பிரிவில் இருந்து நீக்கி, எம்.பி.சி., பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். எம்.பி.சி., பிரிவில் சேர்க்காததால், எங்களது சமுதாயத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.இக்கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக, சங்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பர். அதன்பின், தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தப்படும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், எங்களது குரல் உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும். அடுத்த தேர்தலில் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம். இது குறித்து தொடர் அமைதி வழியான போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி