உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, காரச்சேரி மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில், வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக நிகழ்சிகள் கடந்த 8ம் தேதி, மங்கள இசை மற்றும் விநாயகர் பூஜையுடன் துவங்கியது.நேற்று, 9ம் தேதி, தன பூஜை, கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, தீபாராதனை நிகழ்சிகள் நடந்தது. இன்று 10ம் தேதி, காலை 9:30 மணிக்கு, அங்குரார்ப்பணம், விமான கலசங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹுதி போன்ற நிகழ்சிகள் நடக்கிறது.நாளை, 11ம் தேதி, காலை 9:05 மணிக்கு, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாக பூஜை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்சிகள் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு, நவசக்தி அர்ச்சனை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், நவரத்தின பஞ்ச லோக ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்சிகள் நடக்கிறது.வரும், 12ம் தேதி, அதிகாலை 3:30 மணிக்கு, மாரியம்மனுக்கு நான்காம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு, காலை 5:05 மணிக்கு, மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.அதன்பின், காலை 7:00 மணிக்கு, மாகாளியம்மனுக்கு நான்காம் சாலை யாக பூஜையும், 9:05 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆங்கார பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை