உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கோவைக்கு ரூ.49.70 கோடி கடனுதவி

சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கோவைக்கு ரூ.49.70 கோடி கடனுதவி

பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், மாவட்ட தொழில் மையம், சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் வாயிலாக, 927 நபர்களுக்கு, 49.70 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடந்தாண்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் வாயிலாக, 55 நபர்களுக்கு ரூ.6.79 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 213 நபர்களுக்கு ரூ.27.92 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 284 நபர்களுக்கு ரூ.3.20 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 375 நபர்களுக்கு ரூ.11.79 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்றாண்டுகளில், கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் வாயிலாக மொத்தம், 927 நபர்களுக்கு, ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை