உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுரிபாளையத்தில் ஓபன் கேரம்  போட்டி

சவுரிபாளையத்தில் ஓபன் கேரம்  போட்டி

கோவை:சவுரிபாளையத்தில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில், போட்டியாளர்கள் குறி பார்த்து அடித்து, வெற்றியை தங்கள் வசப்படுத்தினர். லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கேரம் பயிற்சி மையம், கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், மாவட்ட ஓபன் கேரம் போட்டி சவுரிபாளையத்தில் உள்ள சொசைட்டி ஹாலில் நடந்தது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 130க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை