உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு

சங்கரா கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் எம்.பி.ஏ., மாணவர்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நேற்று பேரணியாக சென்றனர்.கல்லுாரி சார்பில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜனநாயக செயல்பாட்டில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும், கல்லுாரி மாணவர்கள் சரவணம்பட்டி சந்திப்பில் 2 கி.மீ., தொலைவு, விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லுாரியின் இணைச் செயலாளர் கல்யாணராமன் பேரணியை துவக்கி வைத்தார். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி முதல்வர் ராதிகா, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை