மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
கோவை:கோவை விழாவின் ஒரு பகுதியாக நடக்கவுள்ள விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்க முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கோவை விழாவின் 17ம் பதிப்பு, வரும் நவ.,24ம் தேதி முதல் நடக்கவுள்ளது. கோவை விழாவில் கோவையின் வரலாறு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு, போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு மற்றும் 'ஆரோக்கியமான வாழ்வு' என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியும் நடக்கிறது. இதில், 2.5கிமீ., 5 கிமீ., 10கிமீ., 15 கிமீ., என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாரத்தான் டி சர்ட்டை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டு முன்பதிவை துவக்கி வைத்தார். பங்கேற்க விரும்புவோர் www.coimbatorevizha.comஎன்ற தளத்தில் பதிவு செய்யலாம்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago