உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடும்ப ஆட்சியில் தி.மு.க.,வினர் அடிமைகள்

குடும்ப ஆட்சியில் தி.மு.க.,வினர் அடிமைகள்

உடுமலை: ''மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தியாகிகளை கண்டு கொள்ளாமல், கருணாநிதி பெயரை துாக்கிப்பிடித்து வருகின்றனர்'', என சீமான் பேசினார்.உடுமலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xgukp3ed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதனை கண்டு கொள்ளவில்லை. மொழிப்போர் தியாகிகளுக்கு தி.மு.க., அரசு, எந்த விதமான நினைவு அரங்கங்களும் அமைக்கவில்லை. ஆனால், கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைக்கின்றனர். எங்கும் தமிழ் இல்லை; திராவிடஆட்சிகளால், தமிழ், இனம் அழிக்கப்படுகிறது.லஞ்சம், ஊழல், மது திணிப்பு என அனைத்தையும் சகித்துக்கொள்வதால், அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து வைத்து, குடும்பம் ஆள்கிறது. கட்சியினர் அடிமைகளாக உள்ளனர். எந்த மொழியும் கற்பது தவறில்லை; தாய் மொழியில் பேச வேண்டும்; உணர்வுடன் இருக்க வேண்டும். சின்னத்தை பார்த்து வாக்களிக்கக்கூடாது ; எண்ணத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை வர வேண்டும். சமச்சீர் பாடத்திட்டம் உள்ளது; ஆனால், தமிழகத்தில், சமச்சீர் கல்வி இல்லை. மதுக்கடையை அரசு நடத்துகிறது. ஆனால், கல்வியை வியாபாரமாக்கியுள்ளது.சேலம் மாநாட்டிற்கு, 58 கோடி நிதி திரட்டி, 50 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்த தி.மு.க., வுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லை. இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mahendran TC
ஜன 25, 2024 16:40

திமுக என்ற குடும்பக்கட்சியின் ஆட்சியில் தமிழக மக்களையே அடிமைகளாக ஆக்கி விட்டார்கள் .


Karuthu kirukkan
ஜன 25, 2024 13:05

முற்றிலும் உண்மை, சீமான் கடந்த புயல் மழை வெள்ளத்தில் இரவு பகல் ஓய்வின்றி மக்களை சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் ஆனால் ஆளும் கட்சி ? எதிர்கட்சி ?


Karuthu kirukkan
ஜன 25, 2024 13:03

முற்றிலும் உண்மை, சீமான் கடந்த புயல் மழை வெள்ளத்தில் இரவு பகல் ஓய்வின்றி மக்களை சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் அனால் ஆளும் கட்சி ?


r ravichandran
ஜன 25, 2024 12:53

அரசியல் சாசன பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பும் , கட்சி மாநாட்டுக்கும் வித்தியாசம் இல்லையா.


N Annamalai
ஜன 25, 2024 12:23

உண்மையை யார் சொன்னாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்


Sampath Kumar
ஜன 25, 2024 11:52

அடிமைகள் எல்லா கட்சிளும் உள்ளார்கள் யார் அவர்கள் அரசியிலில் மக்களுக்கு சேவை செயவா இல்லை சொத்து சேர்க்க அவன் எந்த கட்சி அனால் அவன் எண்ணம் சொத்து சொத்து மட்டுமே அதுனால இந்த பேச்சு எல்லாம் ஏடு படாது


ராமகிருஷ்ணன்
ஜன 25, 2024 10:50

சீமானை இனிமே சின்ன வைகோ என்று அழைக்கலாமா


ஆரூர் ரங்
ஜன 25, 2024 10:38

ஒவ்வொரு கூட்டத்திலும் தவசி படத்திற்கு தான் எழுதிய ????வசனங்களைக் குறிப்பிடலாம்.


magan
ஜன 25, 2024 10:07

Super annan semaan


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜன 25, 2024 09:54

இந்த சீமான் திமுகவை திட்டுவதை நாம் ஒருபோதும் நம்பவே கூடாது முதலில் இவரின் கொள்கை என்ன எந்தக் காலத்தில் இவருடைய கட்சியின் கொள்கை நிலையாக இருந்திருக்கிறது? இன்றைக்கு ஒரு அரசியல் தலைவரை கண்டபடி திட்டிவிட்டு நாளைக்கே அவரைப் புகழ்ந்து பேசுவது என்பதுதான் சீமான் இதுவரை நடத்திவரும் கேவலமான அரசியலாகும் ஒரு உதாரணத்துக்கு, காகித கப்பலுக்கு கூட கேப்டனாக இல்லாதவர் எல்லாம் கேப்டனாம் என்றும் இதைவிட இன்னும் படு மோசமாக விஜயகாந்த்தை விமர்சித்து விட்டு அவருடைய இறுதி அஞ்சலிக்கு வந்து புதிய கதைகளை சொல்லி நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த சீமான். செத்துப் போன விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தான் நடத்தும் கூட்டத்தில் தன்னுடைய தற்குரித் தம்பிகளின் கைகளில் பிளாஸ்டிக் குடங்களை கொடுத்து பிச்சையெடுப்பது மட்டுமல்லமால் அதற்கு திரள்நிதி என்று அபூர்வமான பெயர் வைத்து வசூலித்து அந்த காசில் ஆடம்பர கார் வாங்கி அதில் பவனி வருவதுதான் சீமானின் ஏமாற்று தமிழ்தேசியக் கொள்கைகளில் முக்கிய கொள்(ளை)கையாகும் எனவே அப்பாவி தமிழக இளைஞர்கள் இவருடைய உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொண்டு இவரின் பின்னால் சென்று தங்களின் பொன்னான வாழ்க்கையை தொலைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை