உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆறாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகன புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இம்மாதம், 6ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா தொடர்ந்து நடக்கிறது. இதில், கருட வாகன புறப்பாடு, யாழி வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை