உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது

பாலக்காட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது

பாலக்காடு:பாலக்காடு அருகே, மனைவியை தடியால் தாக்கி கொலை செய்த, கணவனை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே கோட்டாயி சேந்தம்காட்டை சேர்ந்தவர் வேலாயுதன், 72, இவரது மனைவி வேசுக்குட்டி, 65. இவர்களின் பிள்ளைகள் ராஜகுமாரன், விஜயகுமாரன், நளினி, சுமதி ஆகியோர் குடும்பத்துடன் அதே பகுதியில், வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.வேலாயுதன்-, வேசுக்குட்டி இடையே, குடும்ப பிரச்னை காரணமாக, அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வேலாயுதன், உறங்கிக் கொண்டிருந்த மனைவி வேசுக்குட்டியை விறகு, தடியால் சரமாரியாக தாக்கி கொன்றுள்ளார்,அப்பகுதியினர், அருகில் குடியிருக்கும் உறவினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கோட்டாயி போலீசார் வேலாயுதனை கைது செய்தனர்.ஆலத்துார் டி.எஸ்.பி., சந்தோஷின் தலைமையிலான போலீசார், வேசுக்குட்டியின் உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப்பிறகு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை