உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் ஸ்ரீ வற்றியம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா

சூலுார் ஸ்ரீ வற்றியம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா

கோவை;சூலுார் ஸ்ரீ வற்றியம்மன் குலதெய்வ திருக்கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா, வரும் 22ம் தேதி நடக்கிறது.சூலுார் ஸ்ரீ வற்றியம்மன் குலதெய்வ திருக்கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு சிவாச்சாரியர்கள் முன்னிலையில், முகூர்த்தகால் விழா நடந்தது. நாளை மாலை 5:00 மணிக்கு வற்றியம்மனுக்கு முதற்கால யாகபூஜை மங்கள இசை, மஹா கணபதி, புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, கும்பஸ்தாபனம், 108 திரவ்யயாகம் நடக்கிறது.வரும் 21ம் தேதி, இரண்டாம் கால யாகபூஜை காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. மங்களஇசை, விசேஷசந்தி, வேதிகார்ச்சனை, திருமுறை சமர்ப்பணம், மஹாதீபாராதனை நடக்கிறது.வரும் 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, ஸ்ரீவற்றியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தசதரிசனம், உபசாரம், மஹாதீபாராதனை நடைபெறும்.திரளானோர் பங்கேற்க, கோவில் விழாக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை