நடந்து செல்லக்கூட இடமின்றி அவதி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்.கோவில் வீதியில், ரோட்டின் இருபக்கமும் இருசக்கர வாகனங்கள் தாறுமாக நிறுத்தப்படுகின்றன. கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஒருவழிப்பாதையில் அத்துமீறி இயக்கப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு இடமின்றி அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் ஆலோசனை செய்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.