உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் ராகவேந்திர சுவாமிகளின் 353ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடலுார் ஸ்ரீ விஜய விட்டலா மகளிர் அணியினரின் பஜனை நடந்தது.இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை