உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வில்வித்தை போட்டி: கடலுார் வீரர்கள் சாதனை

வில்வித்தை போட்டி: கடலுார் வீரர்கள் சாதனை

கடலுார்: அகில இந்திய அளவிலான வில்வித்தை போட்டியில், கடலுார் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்.கோவாவில் கடந்த 21 முதல் 24ம் தேதி வரை அகில இந்திய அளவிலான வில்வித்தை விளையாட்டு போட்டி நடந்தது. தமிழக அணி சார்பில் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகடாமி பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமையில் 26 பேர் பங்கேற்றனர். அதில், 6 பேர் தங்கப்பதக்கம், 13 பேர் வெள்ளி பதக்கம், 8 பேர் வெண்கலப்பதக்கம் வென்றனர். பதக்கம் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை எஸ்.பி., ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பயிற்சியாளர் சுரேஷ்குமார், கார்த்திகேயன், சந்திரசேகர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை