உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரசாயன உரங்கள் குறைப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

ரசாயன உரங்கள் குறைப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம்: கம்மாபுரம் வட்டார விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்து பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆத்மா குழு தலைவர் ராயர், வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஜெபக் கென்னடி, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாஸ்கரன், அறிவியல் நிலைய பேராசிரியர் காயத்ரி ஆகியோர் மண் வளம், நீர்வளம், தக்கை பூண்டு பயன்பாடுகள், இயற்கை விவசாயம் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.வேளாண் அலுவலர் ரத்னா, துணை அலுவலர் பிரான்சிஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். கம்மாபுரம் வட்டார முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி