உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயார் சேர்த்தி உற்சவத்தில் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை