உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது

 பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது

கடலுார்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்றிரவு 11:30 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஸ்ரீராம்,24; நரசிங்க பெருமாள் மகன் சந்துரு,19; ஆகியோர் புதுச்சேரியில் இருந்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.உடன், இருவரையும் பிடித்து கடலுார், புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை