உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் குரு போற்றி கூட்டு வழிபாடு

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் குரு போற்றி கூட்டு வழிபாடு

கிள்ளை,: சிதம்பரம் கொத்தங்குடி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று குரு போற்றி கூட்டு வழிபாடு நடந்தது.அதையொட்டி, ஆதிபராசக்திக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கூட்டு வழிபாட்டை, சக்தி பீட துணைத் தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.செயலாளர் அருளானந்தம்,பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார் முன்னிலை வகித்தனர். குரு போற்றி வழிபாடு காலை 10: 00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை நடந்தது. விழாவில், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் பார்த்தசாரதி, வீரக்குமார், வெங்கடாசலம், சுமதி, அஞ்சம்மாள், சத்தியபாமா, சீத்தாலட்சுமி, சிவகாமசுந்தரி உட்பட பலர், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை