உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

 மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் நேற்று எம்.பரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச்சேர்ந்த கந்தசாமி, 74; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கந்தசாமியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ