உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது

தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது

கடலுார் : கஞ்சா வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.கடலுார அடுத்த எம்.புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சிவாஜி,18; இவர், கடந்த அக்டோபர் 28ம் தேதி கஞ்சா விற்றபோது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றது, பொது இடத்தில் தகராறு செய்தது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது.அதனையொட்டி, இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை தடுப்பு காவலில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவாஜியிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை