உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிறப்பு தீவிர திருத்தப்பணி: தாசில்தார் ஆய்வு

 சிறப்பு தீவிர திருத்தப்பணி: தாசில்தார் ஆய்வு

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தாசில்தார் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்கும் வகையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலத்தில் நேற்று ஆய்வு செய்தார். அதில், தொகுதியிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் செயல்பாடுகள், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்காளர் பதிவேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வருவாய் அலுவலர் சதாசிவம், வி.ஏ.ஓ.,க்கள் விஷ்ணுராஜ், விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை