உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட கிரிக்கெட் போட்டி; கடத்துாரில் பரிசு வழங்கல்

மாவட்ட கிரிக்கெட் போட்டி; கடத்துாரில் பரிசு வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துாரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த, 5 நாட்களாக நடந்தது. இப்போட்டியில், 62 அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் வேப்பிலைப்பட்டி அணி முதல் பரிசாக, 20,024 ரூபாய், கடத்துார் ஆர்.சி.சி., 2ம் பரிசாக, 15,024 ரூபாய், கடத்துார் சச்சின் பாய்ஸ் அணி, 3ம் பரிசாக, 10,024 ரூபாய், சோளக்கொட்டாய் அணி, 4ம் பரிசாக, 8,024 ரூபாய், 5,024 ரூபாய் மற்றும், 2024, ரூபாய் என ஆறுதல் பரிசு, 4 அணிகளுக்கு வழங்கப்பட்டது. பரிசுகளை கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்டோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை