உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 35 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கடந்த, 2016 முதல், தமிழ்மணி என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, 8 ஆக இருந்த நிலையில், அவர் வீடு வீடாக சென்று பெற்றோரிடம் பேசி, மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களின் தனித்திறமையை கண்-டறிந்து ஊக்குவித்தார்.கடந்த, 2ல் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், செங்குட்டை அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார். அவருக்கு பதில், வசந்தி என்பவர், வகுரப்பம்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை, 9:00 மணிக்கு தலைமையாசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக நியமிக்க வலியுறுத்தி மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்-பாமல் பள்ளி நுழைவாயில் முன், பெற்றோர் மற்றும் பொது-மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேஷ், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்-திற்குள் தலைமையாசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மாண-வர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.முன்னதாக பணி மாறுதலில் சென்ற தமிழ்மணி, பள்ளிக்கு வந்து மாணவ, மாணவியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டு அழு-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை