உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்குபிரிவு இளநிலை உதவியாளர் சரவணன், மீது மாநகராட்சி நிர்வாகம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் சரவணன். இவர் ஜூன் மாதத்தில் மாநகராட்சியில் மக்கள் செலுத்திய வரிப்பணம் ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தார். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவரிடமிருந்து பணத்தை மீட்டு அவரை சஸ்பெண்ட் செய்தது. இதை முறையாக கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி, என்பவருக்கும் 'மெமோ' வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாநகராட்சி பணத்தை கையாடல் செய்து சஸ்பெண்டாகியிருக்கும் சரவணன்,மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி