உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து

நத்தம் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து

நத்தம், : நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ வித்தில் செங்கல், பொருட்கள் எரிந்தன.நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்தவர் பாரதி 40. சேர்வீடு பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு செங்கல் கால்வாய் மேல் உள்ள குடிசையில் தீப்பற்றியது. நத்தம் தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட செங்கல்கள், குடிசை செட்டுகள், பொருட்கள் எரிந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ