உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்

பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்

பழநி : ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக 202 பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து துவங்கிய அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் குழுவினர் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். பழநி ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக 202 பக்தர்கள் திருச்செந்துாரில் இருந்து ஜூன் 6 ல் துவங்கிய பயணம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருச்செந்துார், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி கோயில்களில் தரிசனம் முடித்து நேற்று பழநி முருகன் கோயிலில் வந்தனர். இவர்களை பழநி கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் வரவேற்றார். பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை