| ADDED : நவ 16, 2025 04:02 AM
வாலிபர் விபத்தில் உயிரிழப்பு தாடிக்கொம்பு: வடமதுரை வேல்வார்கோட்டை புதுக்களராம்பட்டி ஜெகஜோதி மகன் சூர்யா 24. தனியார் நிறுவன ஊழியரான இவர் புதிதாக பைக் வாங்கி வேடசந்தூர் ஆர்.டி.ஓ., ஆபீஸ் சென்று விட்டு, மீண்டும் திண்டுக்கல் சென்றார். தாடிக்கொம்பு சேடப்பட்டி அரவிந்த் என்ற நண்பரை உடன் அழைத்துச் சென்றார். வேடசந்தூர் - மதுரை நெடுஞ்சாலையில், அஞ்சலி பைபாஸ் மேம்பால ரோட்டில் சென்றுள்ளனர். அங்கு வளைவான ரோடாக இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் மேம்பால தடுப்பில் மோதியதில், இருவரும் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலி வடமதுரை: ஏழுமலையான் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 60. ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 12:00 மணியளவில் வேலை முடிந்து சைக்கிளில் நான்கு வழிச்சாலையை கடந்தபோது தாண்டிக்குடி மங்களம் கொம்பு ஜீவநேசன் 20 ஓட்டி வந்த வேன் மோதி சம்பவ இடத்தில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.