உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்

 கொடை யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்த நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இரு வாரமாக வறண்ட வானிலை நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. நகரை சூழ்ந்த பனிமூட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை