| ADDED : ஆக 01, 2024 02:22 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அறநிலையத்துறை நேரடி கட்டுப்-பாட்டில் உள்ள, காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள கோவில்-களில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பக்-தர்கள் இறங்கி குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில், காங்கேயம்-பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், நஞ்சை காளமங்கலம் மத்-தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், குலவி-ளக்கு அம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி கோவில், ஊஞ்சலுார் மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நஞ்சை கிளாம்பாடி கைலாச-நாதர் கோவில் உட்பட காவிரி கரையில் உள்ள சிறிய கோவில்க-ளுக்கு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது. வரும், 3, 4 ஆகிய தேதிகளில் ஆடி-18, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் இத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.உள்ளூர் விடுமுறைசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்-னிட்டு வரும், 3ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவ-லகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடு-முறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, வங்கிக-ளுக்கு பொருந்தாது. இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.