உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா சித்தா கல்லுாரியில் நாடி குறித்து கருத்தரங்கு

நந்தா சித்தா கல்லுாரியில் நாடி குறித்து கருத்தரங்கு

ஈரோடு : ஈரோடு நந்தா சித்த மருத்துவ கல்லுாரியில், மகளிர் மற்றும் மகப்பேறு நோய்களில், நாடியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை சித்த மருத்துவ கல்-லுாரி பேராசிரியர் சசி, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மேனகா வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் சசி, வேலு சித்த மருத்துவ கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர், கர்ப்ப நாடி, மகப்பேறு சமயத்தில் நாடித்துடிப்பு-களின் செயல்பாடு அடங்கிய ஆதாரங்களை, காணெலி காட்சி மூலம் மாணவர்களுடன் தங்கள் கருத்தை பறிமாறிக் கொண்டனர். கருத்-தரங்கில் சித்த மருத்துவக்கல்லுாரி மருத்துவர், பேராசிரியர், உதவி பேராசிரியர், மாணவர்கள் உட்பட, 140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை