உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழில் பெயர் பலகை கடைகளுக்கு வழங்கல்

தமிழில் பெயர் பலகை கடைகளுக்கு வழங்கல்

ஈரோடு:அனைத்து வணிக நிறுவனவங்களும், தமிழில் பெயர் பலகை வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், உறுப்பினர்களுக்கு தமிழ் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அந்தோணி யூஜின் வரவேற்றார். தி.மு.க., மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் தமிழ் பெயர் பலகை மற்றும் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகையாக, 10,000 ரூபாய் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ