உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் கார் மோதி மூதாட்டி பலியான வழக்கில், டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு, திண்டல், வீரப்பம்பாளையத்தை சேர்ந்த செங்கோடன் மனைவி ஸ்ரீரங்கம்மாள், 70; கடந்த, 28ம் தேதி காலை வீரப்பம்-பாளையம் அருகே சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த டாடா நெக்சன் கார் மோதியதில் பலத்த காய-மடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய ஈரோடு, முனிசிபல் காலனி, தியாகி குமரன் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன், 28, மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை