உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகாதேவ கோவில் அன்னதானத்துக்கு 6 டன் காய்கறி கேரளாவுக்கு பயணம்

மகாதேவ கோவில் அன்னதானத்துக்கு 6 டன் காய்கறி கேரளாவுக்கு பயணம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம், வைக்கம் மகாதேவ சுவாமி கோவில் அன்னதானத்திற்கு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள, 6 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.கேரளா மாநிலம், வைக்கம் மகாதேவ சுவாமி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு, புன்செய்புளியம்பட்டி பண்ணாரியம்மன் அன்னதானக்குழு சார்பில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.தக்காளி, முட்டைக்கோஸ், கத்தரிக்காய், வெண்டை, பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு, பூசணி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள, 6 டன் காய்கறி வகைகள் லாரியில் ஏற்றப்பட்டு கேரளா மாநிலம், வைக்கம் மகாதேவ சுவாமி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை