உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வரும் 30ல் கைத்தறி கண்காட்சி துவக்கம்

ஈரோட்டில் வரும் 30ல் கைத்தறி கண்காட்சி துவக்கம்

ஈரோடு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத்திய ஜவுளித்துறை அமைச்சக நிதியுதவியுடன், தமிழக அரசின் கைத்தறி துறை சார்பில், ஈரோட்டில் வரும், 30 முதல் ஜன., 12 வரை மாநில அள-விலான கைத்தறி கண்காட்சி நடக்கிறது.தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கைத்தறி நெச-வாளர் கூட்டுறவு சங்கங்களில், உற்பத்தி செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த தனித்-துவமான ஜவுளி ரகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்-ளனர்.ஈரோடு, பூந்துறை சாலை ஏ.எம்.மஹாலில் தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சி, விற்பனை நடக்க உள்ளது. சென்னிமலை போர்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, வீட்டு உபயோக ஜவுளிகள், பவானி ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் பட்டு துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. அனுமதி இல-வசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை