உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழனி கோவில் தேவஸ்தானம் நாட்டு சர்க்கரை கொள்முதல்

பழனி கோவில் தேவஸ்தானம் நாட்டு சர்க்கரை கொள்முதல்

கோபி, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 59.34 லட்சம் ரூபாய்க்கு, நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் நேற்று கொள்முதல் செய்தது.கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை ஒரே விலையாக, 3,000 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), குறைந்தபட்சம், 2,670 முதல், 2,760 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 2,115 மூட்டைகளும், 57.92 லட்சம் ரூபாய்க்கு விற்றது.அதேபோல் உருண்டை வெல்லம், 84 மூட்டை (30 கிலோ) வரத்தானது. அவற்றில் ஒரு மூட்டை, 1,620 முதல், 1,740 ரூபாய் வரை விற்றது. வரத்தான அனைத்து மூட்டைகளும், 1.42 லட்சம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 59.34 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை