உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டுக்கு செல்லும் வழியை தடுத்ததால் பிணத்துடன் மறியல்

சுடுகாட்டுக்கு செல்லும் வழியை தடுத்ததால் பிணத்துடன் மறியல்

அந்தியூர், அந்தியூர், மூலக்கடையை அடுத்த குள்ளவீராம்பாளையத்தை சேர்ந்தவர் ராசம்மாள், 80; வயது மூப்பால் நேற்று காலை இறந்தார். இறுதிச்சடங்கு செய்ய சடலத்தை உறவினர்கள், சுடுகாட்டுக்கு மாலை 5:00 மணிக்கு கொண்டு சென்றனர். குள்ளவீராம்பாளையம் அரசுப்பள்ளி எதிரில், சுடுகாட்டுக்கு செல்லும் வழியை, விவசாயி ஒருவர் 'கேட்' போட்டு தடுத்துள்ளார். 'இந்த வழி பொது வழியில்லை; சுடுகாட்டுக்கு வேறு வழியில் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், பேச்சுவார்ததை நடத்தியும் பலனில்லை.இதனால் இரவு, 7:00 மணிக்கு சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சடலத்தை வைத்துவிட்டு, வெள்ளித்திருப்பூர்-மூலக்கடை சாலையில், குள்ளவீராம்பாளையத்தில், 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். வெள்ளித்திருப்பூர் போலீசார் அந்தியூர் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை