உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு: ஈரோடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது.ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வலம்புரி கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து, விநாயகரை வழிபட்டனர்.முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, வேதிகா பூஜை, யாக பூஜை நடந்தது. விமான கலசத்திற்கும், மூலவர் விநாயகர், பரிவாரமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர், சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள், நீதிமன்ற பணியாளர்கள் விநாயகரை வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி