மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
23 hour(s) ago
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
23 hour(s) ago
சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன
23 hour(s) ago
படப்பை: மணிமங்கலம் ஏரி, 0.25டி.எம்.சி., கொள்ளளவும்,18.60 அடி நீர்மட்ட உயரமும் உடையது. புறநகரில், செம்பரம்பாக்கத்தை அடுத்துள்ள இரண்டாவது பெரிய ஏரி.வறட்சி காலங்களில், மணிமங்கலம் ஏரியில் இருந்து சென்னைக்கு எளிதாக தண்ணீர் எடுத்து செல்ல முடியும். ஒரத்துார் நீர்தேக்கத்தில் இருந்து, படப்பை ஏரி வழியாக, மணிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம் உள்ளது. மணிமங்கலம் ஏரி நீரை பயன்படுத்தி மணிமங்கலம், கரசங்கால், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களில், 1,000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யப்படுகிறது. அதிக நீர்வரத்து உடைய இந்த ஏரி, வடகிழக்கு பருவமழை காலங்களில் விரைவாக நிரம்பி, கலங்கல் வழியே 1 டி.எம்.சி.,க்கு மேல் உபரி நீர் வெளியேறி, வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியை சூழ்வதால், அங்கு வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. மணிமங்கலம் ஏரியை ஒட்டி பாரதி நகர், புஷ்பகிரி, காந்தி நகர், சேத்துப்பட்டு பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்தினால் அரை டி.எம்.சி., வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே, மணிமங்கலம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago