சென்னை, 'கிளப்'களுக்கு இடையிலான ஐவர் ரக்பி கால்பந்து போட்டியில், பெண்களில் டிரட்ஸ் அணியும், ஆண்களில் நாடன் ஷார்க்ஸ் அணியும் வெற்றி பெற்று, முதலிடங்களைப் பிடித்தன.தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன், ஐவர் மட்டும் பங்கேற்கும் ரக்பி கால்பந்து போட்டியை, திருவான்மியூரில் நேற்று முன்தினம் நடத்தியது.'கிளப்'களுக்கான இப்போட்டியில் நாடன் ஷார்க்ஸ், டிரஸ்ட், குயின் மேரிஸ் கல்லுாரி, சென்ட்ரல் டீம், எம்.ஜி.ஆர்., ஜானகி, சென்னை கிளப், லேடி சிவசாமி உள்ளிட்ட, இருபாலரிலும் தலா எட்டு அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதியில் நாடன் ஷார்க்ஸ் அணி, லேடி சிவசாமியையும், டிரஸ்ட் அணி, சென்ட்ரல்அணியையும் தோற்கடித்துஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில், டிரஸ்ட் மற்றும் நாடன் ஷார்க்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில், 20 - 15 என்ற கணக்கில், டிரஸ்ட் அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது.ஆண்களில், நாடன் ஷார்க்ஸ் அணி முதலிடத்தையும், செயின்ட் ஆண்டனி கிளப் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.