உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 11ம் தேதி அனுமன் ஜெயந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு

11ம் தேதி அனுமன் ஜெயந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்:ராம பக்தரான அனுமன் பிறந்த மார்கழி மாதம், அமாவாசை தினமான வரும் 11ல், காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.காஞ்சிபுரம் சர்வதீர்த்த கிழக்கு கரையில் அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமிக்கு, அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ல் நடக்கிறது. விழாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடக்கிறது.இதேபோல், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை முத்தியால்பேட்டையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஆஞ்சநேயருக்கு, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:45 மணிக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி