மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்
16 minutes ago
காஞ்சிபுரம்: 'பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த கல்லுாரி மாணவ - மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ- - மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- -- மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை தொழிற் படிப்பு, முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பு கல்வியாண்டான 2025- - 26க்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, கல்லுாரி மாணவ- - மாணவியரிடமிருந்து, https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாணவ - மாணவியர் கல்லுாரியில் கல்வி உதவித் தொகைக்கு என உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை டிசம்பர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16 minutes ago