உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் தங்கம்

அரசு பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் தங்கம்

திருவொற்றியூர்:மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ராணிப்பேட்டையில் கடந்த 18ல் நடந்தது. இதில், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஜனார்த்தனன் பங்கேற்றார். சிறப்பாக விளையாடிய அவர், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.பின், மாநில அளவிலான போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.அதேபோல், மாணவியர் பிரிவில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீகா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.இந்நிலையில், மாவட்ட, மாநில அளவில் சிலம்ப போட்டியில் தடம் பதித்த, அரசு பள்ளி மாணவ - மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், கலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை