உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

 துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் வடிகால்வாய் உள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் கான்கிரீட் திறந்தவெளி வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை