உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

குளித்தலை, குளித்தலை நகராட்சி, கடம்பவனேஸ்வரர் கோவில் முன், தென்கரை பாசன வாய்க்காலில் ஐந்து மாதங்களுக்கு முன்பு, நகராட்சி பொது நிதியில் இருந்து, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடந்தது. பணிகள் நிறைவு பெறாமல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ஒரே மாதத்தில் பாலத்தின் இரண்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அவரச கதியில் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்த புதிய பாலத்தின் விரிசல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரிசல் ஏற்பட்டதை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை