உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்

காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்

கரூர்: கரூரில் காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில், பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் சந்து, இரட்டை வாய்க்காலையொட்டியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சாக்கடை வாய்க்காலில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குப்பை, பிளாஸ்டிக் கழிவு சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ளது. மேலும், தினசரி மார்க்கெட் சாலையில் பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தும் பயனில்லை. இந்நிலையில், காமராஜ் தினசரி மார்க்கெட் சந்து பகுதியில் தேங்கிய குப்பைகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குப்பையை அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை