உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

கரூர்:கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில், மஹா கும்பாபிேஷக விழா நாளை (ஏப்.,22) நடக்கிறது.பிரசித்தி பெற்ற வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், மஹா கும்பாபி ேஷக விழா கடந்த, 6ல் கிராம சாந்தியுடன் தொடங்கியது. கடந்த, 19ல் முதல் கால யாக பூஜையும், 20ல் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.இன்று காலை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை அதிகாலை, 5:30 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை நடக்கிறது. 9:30 மணிக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. 10:00 மணிக்கு மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை