உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிதறி கிடக்கும் குப்பை அகற்ற நடவடிக்கை தேவை

சிதறி கிடக்கும் குப்பை அகற்ற நடவடிக்கை தேவை

கரூர் : கரூர் அருகே தளவாப்பாளையத்தில், டாஸ்மாக் கடை உள்ளது. அதில், பார் வசதி இல்லாததால், குடிமகன்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அப்போது, பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பலமாக காற்று அடிக்கும் போது, காற்றில் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்றி, திறந்த வெளியில் மது அருந்துவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை