உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைகளுக்கு வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.நேற்று பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய்க்கு விற்பனையானது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை