உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்ய சேவை மையம்

எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்ய சேவை மையம்

கரூர், கரூர் மாவட்டத்தில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய இன்றும், நாளையும் சேவை மையங்கள் அமைக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. அதில், வழங்கப்பட்டு வரும் படிவங்களை பூர்த்தி செய்யும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சேவை மையங்கள் இன்றும், நாளையும் காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட உள்ளது. இதை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை